தமிழகம்

45 நிமிடம் இதைச் செய்தால் போதும்.. நாமக்கல் நரசிம்மர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

நாமக்கல் நரசிம்மர் கோயிலில் 45 நிமிடம் அமர்ந்து குறிப்பிட்ட சொல்லைச் சொன்னால் பணம் கொட்டும் என யூடியூப் ஜோதிடர் கூறியதை நம்பி திரளான பக்தர்கள் வந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

நாமக்கல்: நாமக்கல், கோட்டை பகுதியில் புகழ் பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த நிலையில், மார்கழி மாதம் முதல் நாளை ஒட்டி, நேற்று (டிச.16) அதிகாலை சாமி தரிசனம் செய்ய தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த வண்ணம இருந்தனர்.

ஆனால், திடீரென நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே கூடத் தொடங்கினர்.

அதனைத் தொடர்ந்து, சூரியன் உதயம் ஆன பின்பு, கோயில் வளாகம் முழுவதும் அமர்ந்து ஒரே இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தனர். பின்னர், இது குறித்து அவர்களிடம் கோயில் நிர்வாகத்தினர் காரணம் கேட்டபோது, யூடியூப் சேனல் ஒன்றில் ஜோதிடர் பிரகு.பிரபாகரன் என்பவர், மார்கழி முதல் நாளில், மீனம் ராசியில் ராகு, கன்னி ராசியில் கேது பகவான் சஞ்சாரம் செய்வதால், நாமக்கல் நரசிம்மர் கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான செல்வங்களும் கிடைக்கும் என்றும், பணம் கொட்டும் என்றும் கூறி இருக்கிறார். பின்னர் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், திடீரென நாமக்கல் நரசிம்மர் கோவிலில் அளவுக்கதிமான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.

இதையும் படிங்க: சாலையின் இருபுறமும் தலை நசுங்கிய சடலங்கள்.. நாமக்கல்லில் பரபரப்பு!

அது மட்டுமல்லாமல், அந்த ஜோதிடர் தலைமையில் பக்தர்கள் கோயில் வளாகத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து, காலை 6.35 மணி முதல் 7.25 மணி வரை ‘ஓம் ஸ்ரீ ஓம்’ என்ற சொல்லைக் கூறி கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளனர். மேலும், பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள், தங்களது வாகனத்தை சாலையின் இருபுறமும் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கியமாக, இது குறித்து கோயில் நிர்வாகத்திற்கு தெரியவில்லை.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.