தமிழகம்

காசா கிராண்ட் கட்டிடத்தை இடிக்க தயக்கம் ஏன்? பணக்காரர்களை கண்டால் தமிழக அரசு பதுங்குவது ஏன்? சிபிஎம் கேள்வி!

சென்னையில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை பகுதி மக்கள் கடும் எதிர்ப்புக்கு நடுவில் இந்த பணி நடந்து வருகிறது.

குறிப்பாக அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர் சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க: காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்… பாமக பிரமுகர் கைது!!

நீர்ப்பிடிப்பு பகுதியில் சுமார் 593 வீடுகள் இருப்பதால், அங்கு வசிப்பவர்களை அப்புறப்படத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 6 நாட்களாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

450க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது வரை இடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசித்தவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சார்பில் கீழ்ப்பாக்கம்,பெரும்பாக்கம் பகுதிகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அனகாபுத்தூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.

விசிக தலைவர் திருமாவளவன், குடியிருப்புகளை அப்புறப்படுத்தாமல் மக்கள் அங்கேயே வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை செயலாளரை சந்திக்க உள்ளதாக கூறினார்.

இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டி இருக்கும் காசா கிராண்ட் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி கட்டிடங்களை இடிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? ஏழைகளுக்கு எதிராக புல்டோசர்களை நிறுத்தும் அரசு பணக்காரர்களைக் கண்டால் பதுங்கி கிடப்பது ஏன்? என குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இபிஎஸ், அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜூனா… அதிர்ச்சி வீடியோவால் அரசியலில் பரபரப்பு!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…

15 minutes ago

என் படத்தை பார்த்துட்டு அந்த இயக்குனர் ஓங்கி அடிச்சாரு- சேரன் சொன்ன தரமான சம்பவம்!

தவமாய் தவமிருந்து  சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”.…

44 minutes ago

திருச்செந்தூர் கடலில் குளிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து? பக்தர்கள் பரபரப்பு புகார்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…

1 hour ago

விஷால் வீட்டுல அனுமதி எதுக்கு கேட்கணும்.. நான் இப்படித்தான் : சாய் தன்ஷிகா ஓபன் டாக்!

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்னிந்திய அழகு எலைட் அசோசியேஷன் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட…

2 hours ago

பாமகவில் நடப்பது தந்தை மகன் பிரச்சனை.. கூட்டணி கட்சி என்பதால்.. வானதி சீனிவாசன் நெத்தியடி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற…

2 hours ago

வேறு இயக்குனருக்கு கைமாறிய STR 49? ஆகாஷ் பாஸ்கரனுக்கு டாட்டா காட்டும் சிம்பு?

STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிலம்பரசன் தனது 49 ஆவது திரைப்படத்தில் ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தை Dawn Pictures…

2 hours ago

This website uses cookies.