திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு பகுதியில் அமைந்துள்ளது மகா மாரியம்மன் திருக்கோவில் இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும் .
இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று ஆடி மாதம் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு பூஜை காவடி எடுத்தல் என திருவிழா நடைபெற இருந்தது. நாளை நிறத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற உள்ளது இந்த நிலையில் இன்று காலையில் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது
இந்த நிகழ்ச்சிகளில் தங்களுடைய பட்டியல் இன சமூகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தங்களுக்கு அந்த கோவிலில் சம உரிமை வேண்டும் என்று கூறி திருவாரூர் கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு பகுதியில் பட்டியல் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பிறகு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணர் திருவாரூர் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் குடவாசல் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினர் இரு தரப்பு மக்களிடம் பேசினார்கள்
பேச்சுவார்த்தையின் பொழுது பட்டியலின மக்கள் எங்களுக்கு அந்த கோவிலில் சம உரிமை வேண்டும் எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அதற்கு மேல் வகுப்பு மக்கள் நாங்கள் இந்த குத்து விளக்கு பூஜையை நிகழ்ச்சியையும்,காவடி எடுக்கும் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் பட்டியலின மக்கள் இது குறித்து எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் திடீரென வந்து கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பிரச்சனையைக் கிளப்புகிறார்கள் என தெரிவித்தார்கள்.
இரு தரப்பு விளக்கத்தையும் கேட்ட பிறகு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமையில் அதிகாரிகள் கோவிலில் பூட்டினர் இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு கோவில் திறக்கப்படும் என தெரிவித்து சென்றார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.