இதனால்தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை உதயநிதிக்கு கொடுக்கல.. உண்மையை உடைத்த பயில்வான்..!

பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன் என்ற காரணத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன் என்ற காரணத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவில் திரைக்கு பின்னால் நடக்கும் நிகழ்வுகளை வீடியோவாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன் என்பது குறித்து தனது வீடியோவில் பேசியுள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்க மணி ரத்னம் மறுத்துவிட்டார். ரெட் ஜெயண்ட் மூலம் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து படங்களுமே நல்ல லாபத்தை பார்த்து வருகிறது. இதனால் தங்களின் படத்தை வாங்கும்படி ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் தயாரிப்பாளர்கள் கெஞ்சி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் தினமும் படம் பார்க்கிறார். எல்லா படத்தையும் அவர் வாங்குவதில்லை. தனக்கு பிடித்த படங்களை மட்டும்தான் வாங்கி டிஸ்ட்ரிபியூஷன் செய்கிறார். சமீபத்தில் கமலின் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்தார். அந்தப் படம் வசூலில் அசுர சாதனை செய்தது. 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உலக சாதனை படைத்துள்ளது. இதனால் கமல்ஹாசன் மகிழ்ச்சியில் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை நேரிலும் சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ் நாட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியானது. பொன்னியின் செல்வன் போஸ்டர்களிலும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் லோகோ இடம்பெற்றிருந்தது. ஆனால் இசை வெளியீட்டு விழாவில் லோகோ இடம்பெறவில்லை.

இடையில் ஏதோ நடந்துள்ளது. தியேட்டரில் ரிலீஸ் செய்ய ரெட் ஜெயண்ட் நிறுவனம் சில சதவீத தொகை பெற்றுக்கொள்கிறது. இது முழுக்க முழுக்க வெள்ளை பணம்தான். மணிரத்னத்திற்கு தனது படத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளது. ஆகையால் தனது படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கொடுத்தால் கட்டுப்படியாகாது என்பதால் அவுட்ரேட்டில் படத்தை ரிலீஸ் செய்வது அல்லது தானே ரிலீஸ் செய்வது என்ற முடிவை எடுத்துள்ளார்.

ஆனால் லைகா ப்ரடெக்ஷன்ஸ் சுபாஷ்கரன் படத்தின் ரிலீஸ்க்கு முன்னாலே லாபம் பார்க்க நினைக்கிறார். இதனால் பொன்னியின் செல்வன் டிஸ்ட்ரிபியூஷன் விவகாரம் ஊசல் ஆடுகிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை 25 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளது. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

8 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

9 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

9 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

10 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

10 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

11 hours ago

This website uses cookies.