தமிழகம்

தூரத்து உறவினர் செய்யும் வேலையா இது? கணவர் மீது மனைவி வெறிச்செயல்!

மதுரையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து முகத்தை சிதைத்து வீசிய மனைவி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முகம் சிதைந்த நிலையில் ஒரு மனித உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், பிரேதப் பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த நபர் ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒட்டன்சத்திரம், இடும்பன்குரும்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திகணேஷ் என்பது தெரிய வந்து உள்ளது.

எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால், இவருக்கும், அவரது மனைவி பரமேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சக்தி கணேஷின் தூரத்து உறவினரான பெயிண்டர் வேலை செய்யும் கண்ணன் என்பவர், சக்தி கணேஷின் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்து உள்ளார். அப்போது, கண்ணனுக்கும், பரமேஸ்வரிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த சக்தி கணேஷ், இருவரிடமும் இதுகுறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த பரமேஸ்வரி, தனது கணவர் சக்தி கணேஷை கொலை செய்ய கண்ணனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளம் அருகில், சக்தி கணேஷும் கண்ணனும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெய்லி விஜய்க்கு வீடியோ அனுப்புவேன்.. நிறைவுற்ற விஜயின் விருந்து உபசரிப்பு விழா!

இதில் ஆத்திரமடைந்த கண்ணன், போதையில் இருந்த சக்தி கணேஷை கொலை செய்து விட்டு, அவரது முதத்தைச் சிதைத்து பின்பு அவரது உடலை தண்டவாளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

40 minutes ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

44 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

1 hour ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

1 hour ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

2 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

2 hours ago

This website uses cookies.