தமிழகம்

தூரத்து உறவினர் செய்யும் வேலையா இது? கணவர் மீது மனைவி வெறிச்செயல்!

மதுரையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து முகத்தை சிதைத்து வீசிய மனைவி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முகம் சிதைந்த நிலையில் ஒரு மனித உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், பிரேதப் பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த நபர் ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒட்டன்சத்திரம், இடும்பன்குரும்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திகணேஷ் என்பது தெரிய வந்து உள்ளது.

எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால், இவருக்கும், அவரது மனைவி பரமேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சக்தி கணேஷின் தூரத்து உறவினரான பெயிண்டர் வேலை செய்யும் கண்ணன் என்பவர், சக்தி கணேஷின் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்து உள்ளார். அப்போது, கண்ணனுக்கும், பரமேஸ்வரிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த சக்தி கணேஷ், இருவரிடமும் இதுகுறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த பரமேஸ்வரி, தனது கணவர் சக்தி கணேஷை கொலை செய்ய கண்ணனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளம் அருகில், சக்தி கணேஷும் கண்ணனும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெய்லி விஜய்க்கு வீடியோ அனுப்புவேன்.. நிறைவுற்ற விஜயின் விருந்து உபசரிப்பு விழா!

இதில் ஆத்திரமடைந்த கண்ணன், போதையில் இருந்த சக்தி கணேஷை கொலை செய்து விட்டு, அவரது முதத்தைச் சிதைத்து பின்பு அவரது உடலை தண்டவாளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.