மதுரையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து முகத்தை சிதைத்து வீசிய மனைவி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முகம் சிதைந்த நிலையில் ஒரு மனித உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், பிரேதப் பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த நபர் ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒட்டன்சத்திரம், இடும்பன்குரும்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திகணேஷ் என்பது தெரிய வந்து உள்ளது.
எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால், இவருக்கும், அவரது மனைவி பரமேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சக்தி கணேஷின் தூரத்து உறவினரான பெயிண்டர் வேலை செய்யும் கண்ணன் என்பவர், சக்தி கணேஷின் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்து உள்ளார். அப்போது, கண்ணனுக்கும், பரமேஸ்வரிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த சக்தி கணேஷ், இருவரிடமும் இதுகுறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த பரமேஸ்வரி, தனது கணவர் சக்தி கணேஷை கொலை செய்ய கண்ணனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளம் அருகில், சக்தி கணேஷும் கண்ணனும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெய்லி விஜய்க்கு வீடியோ அனுப்புவேன்.. நிறைவுற்ற விஜயின் விருந்து உபசரிப்பு விழா!
இதில் ஆத்திரமடைந்த கண்ணன், போதையில் இருந்த சக்தி கணேஷை கொலை செய்து விட்டு, அவரது முதத்தைச் சிதைத்து பின்பு அவரது உடலை தண்டவாளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.