தமிழகம்

3 குழந்தைகளையும் விட்டுச் சென்ற மனைவி.. விடாது துரத்திய 5 பேர்.. கடைசியில் நேர்ந்த சோகம்!

தெலுங்கானாவில், கணவரை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற மனைவி உள்பட இருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஹைதராபாத்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திவாகர் – பிந்து (25) தம்பதி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கானா மாநிலம், சங்கர் பள்ளிக்கு பிழைப்புக்காக வந்துள்ளனர்.

இதன்படி, திவாகர் பிளம்பர் வேலை செய்து வந்தார். அதேநேரம், பிந்து வீட்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, அங்கீத் சாகேத் (25) என்பவருடன் பிந்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியுள்ளது. இது ஒரு கட்டத்தில் திவாகருக்கு தெரிய வந்துள்ளது.

எனவே, சிந்தில் குண்டாவிற்கு வீட்டை மாற்றி உள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி, பிந்து, அங்கித் சாகேத்துடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனையடுத்து, இந்த ஜோடி, புப்புலகுடாவில் உள்ள நண்பரின் வீட்டில் 3 நாள் தங்கி இருந்துள்ளனர்.

இதனிடையே, மனைவி காணாமல் போனது குறித்து திவாகர், வனஸ்தலிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 11ஆம் தேதி, அங்கித் சாகேத்தின் நண்பர் ஒருவர் அவருக்கு போன் செய்து, புப்புல குடா அனந்த பத்மநாபசாமி கோயில் அருகே வருமாறு அழைத்துள்ளார்.

இந்த அழைப்பின் பேரில், அங்கித் சாகேத் மற்றும் பிந்து ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து, அங்கித் சாகேத் மது அருந்தி உள்ளார். இதனையடுத்து, மது போதையில் நண்பர்களுக்கும், அங்கித் சாகேத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், அங்கித் சாகேத்தை தலையில் சரமாரியாக கத்தியால் குத்தியும், முகத்தில் கல்லைப் போட்டும் கொலை செய்துள்ளனர். அப்போது, அருகே இருந்து இதனைக் கண்ட பிந்து, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி.. சுட்டுப் பிடிக்கப்பட்ட பாம் சரவணன் யார்?

ஆனால், அவரையும் துரத்திப் பிடித்து, கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். பின்னர், இது குறித்த தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அங்கித் சாகேத் மற்றும் பிந்துவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள நபர்களையும் பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

4 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

5 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

5 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

6 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

6 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

7 hours ago

This website uses cookies.