ராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே குடும்ப தகராறில் கணவனை மனைவி தலையில் அடித்து கொலை செய்து விட்டு போலீஸில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த உரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சீராளன்(35). இவரது மனைவி ஷோபனா(30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளாகின்றன.
சீராளன் உரியூர் கிராமத்திலேயே மனைவி ஷோபனா பெயரில் சர்வீஸ் நடத்தி வந்தார். சீராளன் நாள்தோறும் குடிபோதையில் வீட்டிற்கு வருவதால் அடிக்கடி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சீராளனுக்கு அதே பகுதியில் உள்ள மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் குடிபோதையில் வந்த சீராளனுக்கும், மனைவி ஷோபனாவிற்கு தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது மனைவி வேறு பெண்ணுடன் உள்ள தொடர்பு குறித்து கேட்டதால் ஆத்திரமடைந்த சீராளன் மனைவியை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி ஷோபனா, கணவன் தலையில் கல்லை போட்டும் கடப்பரையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சீராளன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
கணவனை அடித்து கொலை செய்த மனைவி ஷோபனா, அதிகாலையில் திருவள்ளுர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
மப்பேடு போலீஸார் அளித்த தகவலின் பேரில் தக்கோலம் போலீஸார் விரைந்து சென்று உரியூர் கிராமத்தில் இறந்து கிடந்த சீராளன் உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து, மனைவி ஷோபனாவை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இறந்த சீராளனுக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர்கள்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.