தமிழகம்

அதிகாலையில் மனைவி செய்த காரியம்.. பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கிடந்த கணவர்.. அரியலூரில் என்ன நடந்தது?

அரியலூரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்த கணவரைக் கொடூரமாகத் தாக்கி, பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்த மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்னப்பா – பச்சையம்மாள் தம்பதி. இவர்களுக்கு பாலமுருகன் மற்றும் பானுப்பிரியா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இதில் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பானுப்பிரியா திருமணம் முடிந்த நிலையில், தாமரைக்குளம் என்னும் கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், மதுவுக்கு அடிமையான சின்னப்பா, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பானுப்பிரியா தாயின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சின்னப்பா மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவரும் பக்கத்துக்கு வீட்டில் சென்று உறங்கி உள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை சின்னப்பா தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்து உள்ளார்.

இதற்கு காரணமாக, மதுபோதையில் தனது கை, கால்கள் மற்றும் அந்தரங்க உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் பச்சையம்மாள் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சின்னப்பாவின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: ’காருக்கு இருக்கும் மதிப்பு என் மகனுக்கு இல்லையா?’.. 9 மணிநேரமாக திக் திக்.. கதறும் தாய்!

ஆனால், இதனிடையே இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. எனவே, உடனடியாக அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சின்னப்பாவின் தலையில் பலமாக தாக்கி இருப்பதும், பிறப்புறுப்பை அறுத்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, மனைவி பச்சையம்மாளை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, குடித்துவிட்டு வந்து தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததால், கணவரை கொலை செய்ததாக பச்சையம்மாள் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இதனை அதிகாலை 3 மணியளவில் நிகழ்த்தியதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

13 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

14 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

14 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

15 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

15 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

16 hours ago

This website uses cookies.