தமிழகம்

கண்ணை மறைத்த உல்லாசம்.. கள்ளக்காதலனுடன் மாயமான மனைவி.. கணவர் எடுத்த முடிவு : தவிக்கும் 3 குழந்தைகள்!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்வேந்தன் (வயது 35). மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை வயது (30).

இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பொன் வேந்தன் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் சமீப காலத்தில் சொந்தமாக கால் டாக்ஸி வாங்கி அதன் உரிமையாளராக இருந்து வருகிறார்

அவரது மனைவியான முத்துப்பிள்ளை பாலமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சரவணன் வயது 12 சண்முகம் வயது 9 சக்தி வயது 7 ஆகிய மூன்று ஆண்குழந்தைகள் உள்ளது.

இவர்கள் பாலமேட்டில் உள்ள பள்ளியில் முறையே ஆறாம் வகுப்பு நான்காம் வகுப்பு மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். பொன்வேந்தன் மனைவி முத்துப்பிள்ளைக்கு வேறு சில ஆண்களுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதனை அடுத்து தொழில் விஷயமாக இவர்கள் பாலமேடு காவல் நிலையம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த முத்து பிள்ளைக்கு பல்வேறு நபர்களுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது இதனை அறிந்த அவரது கணவர் பொன்வேந்தன் அவ்வப்போது மனைவியை கண்டித்து வந்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் கால் டாக்ஸி டிரைவராக வேலைக்கு சேர்ந்த பொன்வேந்தன் 15 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து சென்றுள்ளார்

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முத்துப்பிள்ளை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த முத்து பிள்ளையின் கணவர் பொன்வேந்தன் உடனடியாக சென்னையிலிருந்து பாலமேடு திரும்பி வந்துள்ளார்.

வந்தவர் ஞாயிற்றுக்கிழமை காலை பாலமேடு காவல் நிலையத்தில் தனது மனைவி வேறொருடன் ஓடி விட்டதாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் மீது விசாரணை செய்வதில் தாமதப்படுத்திய காவல்துறையினர் மனைவியை கண்டுபிடித்து தருவதாக சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்

தனது மனைவி ஓடி விட்டதால் கடும் மன அழுத்தத்திலும் விரக்தியிலும் இருந்து வந்த பொன்வேந்தன் நேற்று மாலை காவல் நிலையம் சென்று மனைவியை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டுமென கேட்டுள்ளார்.

இதற்கு பாலமேடு காவல் துறையினர் உரிய பதிலளிக்காததால் வீட்டிற்கு வந்த பொன்வேந்தன் மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு சென்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் பாலமேடு காவல் நிலையம் முன்பாக தனக்குத்தானே மண்னெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன் வேந்தன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்துள்ளார்

இறப்பதற்கு முன்பு தனது மூன்று குழந்தைகளையும் தனது சகோதரியிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்லுமாறு கூறியதாக அவரது சகோதரியின் கணவர் தெரிவித்தார்

கடும் மன உளச்சலில் இருந்த பொன் வேந்தனை காவல்துறையினர் முறையாக அழைத்து உரிய வகையில் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்திருந்தாலோ அல்லது தக்க ஆலோசனைகள் வழங்கியிருந்தாலோ அநியாயமாக அப்பாவியின் உயிர் போயிருக்காது என அருகில் இருந்தவர்கள் கூறினர்

காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவியின் திருமணத்தை மீறிய தகாத உறவு காரணமாக தனது மூன்று ஆண் குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றது அந்தப் பகுதியில் மிகுந்த வருத்தத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர்கள் கள்ளத்தொடர்பு காரணமாக தங்களின் வாழ்க்கையையும் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே நிமிடத்தில் பறிகொடுத்தது பரிதாபத்தை ஏற்படுத்திஇருப்பதாக தெரிவித்தனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

19 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

20 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

21 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

21 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

22 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

22 hours ago

This website uses cookies.