தமிழகம்

கண்ணை மறைத்த உல்லாசம்.. கள்ளக்காதலனுடன் மாயமான மனைவி.. கணவர் எடுத்த முடிவு : தவிக்கும் 3 குழந்தைகள்!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்வேந்தன் (வயது 35). மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை வயது (30).

இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பொன் வேந்தன் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் சமீப காலத்தில் சொந்தமாக கால் டாக்ஸி வாங்கி அதன் உரிமையாளராக இருந்து வருகிறார்

அவரது மனைவியான முத்துப்பிள்ளை பாலமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சரவணன் வயது 12 சண்முகம் வயது 9 சக்தி வயது 7 ஆகிய மூன்று ஆண்குழந்தைகள் உள்ளது.

இவர்கள் பாலமேட்டில் உள்ள பள்ளியில் முறையே ஆறாம் வகுப்பு நான்காம் வகுப்பு மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். பொன்வேந்தன் மனைவி முத்துப்பிள்ளைக்கு வேறு சில ஆண்களுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதனை அடுத்து தொழில் விஷயமாக இவர்கள் பாலமேடு காவல் நிலையம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த முத்து பிள்ளைக்கு பல்வேறு நபர்களுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது இதனை அறிந்த அவரது கணவர் பொன்வேந்தன் அவ்வப்போது மனைவியை கண்டித்து வந்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் கால் டாக்ஸி டிரைவராக வேலைக்கு சேர்ந்த பொன்வேந்தன் 15 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து சென்றுள்ளார்

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முத்துப்பிள்ளை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த முத்து பிள்ளையின் கணவர் பொன்வேந்தன் உடனடியாக சென்னையிலிருந்து பாலமேடு திரும்பி வந்துள்ளார்.

வந்தவர் ஞாயிற்றுக்கிழமை காலை பாலமேடு காவல் நிலையத்தில் தனது மனைவி வேறொருடன் ஓடி விட்டதாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் மீது விசாரணை செய்வதில் தாமதப்படுத்திய காவல்துறையினர் மனைவியை கண்டுபிடித்து தருவதாக சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்

தனது மனைவி ஓடி விட்டதால் கடும் மன அழுத்தத்திலும் விரக்தியிலும் இருந்து வந்த பொன்வேந்தன் நேற்று மாலை காவல் நிலையம் சென்று மனைவியை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டுமென கேட்டுள்ளார்.

இதற்கு பாலமேடு காவல் துறையினர் உரிய பதிலளிக்காததால் வீட்டிற்கு வந்த பொன்வேந்தன் மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு சென்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் பாலமேடு காவல் நிலையம் முன்பாக தனக்குத்தானே மண்னெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன் வேந்தன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்துள்ளார்

இறப்பதற்கு முன்பு தனது மூன்று குழந்தைகளையும் தனது சகோதரியிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்லுமாறு கூறியதாக அவரது சகோதரியின் கணவர் தெரிவித்தார்

கடும் மன உளச்சலில் இருந்த பொன் வேந்தனை காவல்துறையினர் முறையாக அழைத்து உரிய வகையில் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்திருந்தாலோ அல்லது தக்க ஆலோசனைகள் வழங்கியிருந்தாலோ அநியாயமாக அப்பாவியின் உயிர் போயிருக்காது என அருகில் இருந்தவர்கள் கூறினர்

காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவியின் திருமணத்தை மீறிய தகாத உறவு காரணமாக தனது மூன்று ஆண் குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றது அந்தப் பகுதியில் மிகுந்த வருத்தத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர்கள் கள்ளத்தொடர்பு காரணமாக தங்களின் வாழ்க்கையையும் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே நிமிடத்தில் பறிகொடுத்தது பரிதாபத்தை ஏற்படுத்திஇருப்பதாக தெரிவித்தனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

36 minutes ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

40 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

1 hour ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

1 hour ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

2 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

2 hours ago

This website uses cookies.