குடும்ப பிரச்சனையால் மனைவி கண்டம்துண்டமாக வெட்டி கொடூர கொலை : எஸ்கேப் ஆன கணவனை கைது செய்தது போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 1:26 pm
Wife Murder - Updatenews360
Quick Share

விழுப்புரம் : குடும்ப பிரச்சனையால் மனைவியை கொடூரமாக கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட வானூர் கிளியனூர் அருகே உள்ள தைலாபுரம் கருடகம்ப வீதியைச் சேர்ந்த சிவகேசு மகன் சங்கர் (வயது 42) கூலி தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 40).

இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவனுக்கு மனைவிக்கும் இன்று காலை ஏற்பட்ட தகராறில், சங்கர் கத்தியால் மனைவி பாக்கியலட்சுமி வலது பக்க தலையில் கொடூரமாக வெட்டியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து கிழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாக்கியலட்சுமியை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து கணவர் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கணவர் மனைவி பிரச்சனையில் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 397

0

0