தமிழகம்

நண்பனின் மனைவியுடன் தீரா காதல்.. உச்சத்திற்கு சென்ற தகாத உறவு.. இளைஞர் பரிதாப பலி!

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மருதிபட்டி அருகே உள்ள கல்லடிப்பட்டி கிராமத்தில், பேருந்து நிழல் கூடத்தில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் உடல் ரத்த வெள்ளத்தில் மண்டை உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு இருந்தது, அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இதனைத் தொடர்ந்து மொரப்பூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்து கிடைக்கும் இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்த இளைஞர் கணபதிப்பட்டி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகன் ராஜாராமன் என்பதும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் ஒரு மகன் மற்றும் மனைவி உள்ளதாகவும், இவர் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.

ராஜாராமன்

நேற்று இரவு ராஜாராமனுக்கும் அவருடைய மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தான் கோயம்புத்தூருக்கு செல்வதாக துணி பைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளாராம்.

இந்த நிலையில் காவல்துறையினரின் விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, ராஜாராமனின் மனைவி தமிழ் இலக்கியா அரூரில் உள்ள ஒரு தனியார் சலூன் மற்றும் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் அங்கு, உடன் பணிபுரிந்து வரும் சரவணகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு வருடமாக இருவருக்கும் கேடா நட்பு இருந்து வந்த நிலையில் தமிழ் இலக்கியாவின் கணவர் ராஜாராமனுடன் நட்பாக பழகி வந்துள்ளார் சரவணகுமார்.

சரவணக்குமார்

இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த ராஜாராமனை உடன் இருந்த சரவணகுமார் கல்லால் தலையில் தாக்கி சிதைக்கப்பட்டுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கியாவை காவல்துறையினர் மொரப்பூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சரவண குமாரையும் விசாரணைக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்த ராஜாராமனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

16 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

17 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

17 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

17 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

17 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

18 hours ago

This website uses cookies.