வேலைக்கு செல்லாத கணவர்.. 24 மணி நேரமும் குடி : மூச்சுத் திணற திணற வந்த சத்தம் : திருவள்ளூர் அருகே பயங்கரம்!!
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது30). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையான நிலையில் கடந்த சேர்ந்த 11-ம் தேதி மர்மமான முறையில் இவரது வீட்டில் உள்ள படுக்கை அறையில் உயிரிழந்து கிடந்தார்.
இது தொடர்பாக வெங்கல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது. இதனால் ரமேஷ் மனைவி தங்கலட்சுமி வயது(27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது கணவரை முகத்தில் தலையணை வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் தங்கலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
அவரது உத்தரவின் பேரில் போலீசார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். மனைவியே தனது கணவனை கொலை செய்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.