ராஜஸ்தானில், கள்ளக்காதலைப் பார்த்த கணவரை அடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுவட்ட சாலை பகுதியில், பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனைத் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், உயிரிழந்தது காய்கறி வியாபாரியான தனலால் சைனி என்பது தெரிய வந்துள்ளது. எனவே, அவரது மனைவி கோபாலி தேவி என்பவரைப் பிடித்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, தீனதயாள் என்பவருடன், கடந்த ஐந்து ஆண்டுகளாக கோபாலி தேவி முறை தவறிய உறவில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த சைனி, தனது மனைவியைக் கண்டித்துள்ளார்.
இருப்பினும், அதை பொருட்படுத்தாத கோபாலி தேவி, தனது ரகசியக் காதலனைச் சந்திப்பதை நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் கடையில் ஒன்றாக இருப்பதைப் பார்த்ததும் தனலால் சைனி கடும் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கோபாலி தேவி மற்றும் தீனதயாள் ஒன்று சேர்ந்து, சைனியின் தலையில் இரும்பு ராடால் பலமாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, மயக்க நிலையில் இருந்தவரை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கோபாலி தேவி, தீனதயாள் இருவரும் சேர்ந்து சைனியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று சாலையில் வீசியுள்ளனர். இவை அங்கு இருந்த சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யார் அங்கே.. எட்டிப் பார்த்த கணவனை கொன்ற மனைவி.. என்ன நடந்தது?
மேலும், உடலை ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள சுற்றுவட்ட சாலை பகுதி அருகே எரித்ததாக கோபாலி தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, கோபாலி தேவி மற்றும் தீனதயாளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
This website uses cookies.