தமிழகம்

’என்ன சொல்லிட்டு நீ பண்றியா?’ செல்போனால் கத்திக்குத்து வரை சென்ற மனைவி!

தேனியில், செல்போனில் மறைந்து பேசிய கணவனை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பகுதியில் தினகரன் (23) மற்றும் பிரியா (23) தம்பதி வசித்து வருகின்றனர். இதில், தினகரன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மேலும், பிரியா வீட்டு வேலைகளைக் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், மனைவி பிரியா, அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இதனைக் கவனித்த தினகரன், அதிக நேரம் செல்போனில் பேசக் கூடாது என்று கூறி, பிரியாவைக் கண்டித்து உள்ளார். இதனால் தினகரன் மீது பிரியா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தினகரன் வீட்டில் இருக்கும்போது, அவரது செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது தினகரன், வேகமாக செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது, இதனைப் பார்த்த பிரியா, ‘என்னை செல்போன் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு, நீ மட்டும் மறைமுகமாக வெளியே சென்று செல்போன் பேசலாமா?யாருடன் தனியாக செல்போன் பேசுகிறாய்?’ என்று கேட்டு கடும் கோபம் அடைந்து உள்ளார். அது மட்டுமல்லாமல், கணவரிடமிருந்த செல்போனையும் பறித்து கீழே வீசி உள்ளார்.

இதையும் படிங்க: ’சபாநாயகர் தனிச் செயலரின் மனைவி நான்’.. மிரட்டும் ஆசிரியை? இரட்டைமலை சீனிவாசன் பேத்தி பரபரப்பு புகார்!

இதனையடுத்து, கீழே கிடந்த செல்போனை தினகரன் எடுக்க முயன்று உள்ளார். அப்போது பிரியா, தான் கையில் வைத்திருந்த கத்தியால் தினகரனை சரமாரியாக குத்தி உள்ளார். இதில், அவரது கை மற்றும் நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி உள்ளது.

பின்னர், அவரை மீட்ட உறவினர்கள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நடந்த சம்பவம் குறித்து, தினகரன் போலீசில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு தினகரன் அளித்த புகாரின் பேரில், பிரியா மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

8 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

10 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

10 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

11 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

12 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

12 hours ago

This website uses cookies.