தமிழகம்

8 மணி நேரம் மனைவியின் கைகளை கட்டி சித்ரவதை.. கணவரால் பாதிக்கப்பட்ட நிஜ ‘பாக்கியலட்சுமி’!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தலுபாடு மண்டலத்தில் உள்ள கலுஜுவலபாடு கிராமத்தைச் சேர்ந்த குருநாதம் பாலாஜி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நெருங்கிய உறவினரான பாக்யலட்சுமியை மணந்தார்.

அவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி, தனது மனைவியை கடுமையாக சித்திரவதை செய்து வந்தார்.

இதற்கிடையில், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணுடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். பாக்யலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கிராமத்திற்கு வந்த பாலாஜி, பணத்திற்காக தனது மனைவியைத் துன்புறுத்தத் தொடங்கினார். பாக்யலட்சுமி கைகளை கயிறுகளால் இருபுறத்தில் உள்ள கட்டையில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்து, தலைமுடியை இழுத்து, கால்களால் உதைத்தார்.

பாலாஜிக்கு அவரது சகோதரி ரமணம்மா அவரது கணவர் விஷ்ணு ஆகியோர் உதவி செய்தனர். இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அவர்கள் அடித்து கொடுமை செய்தனர். மீண்டும் திங்கட்கிழமை இரவு மீண்டும் தாக்க முயன்றார், ஆனால் அவர் தப்பித்து அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்றார். அங்கு உள்ளூர்வாசிகள் பாக்யலட்சுமியைக் காப்பாற்றினர்.

இந்த விஷயம் சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு, இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வர்லு கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பாக்யலட்சுமியை மார்க்கபுரம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரது கணவர், அக்கா, அவரது கணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.