ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் கரும்பு லாரியை வழிமறித்து, ஓட்டுநர்களை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால், உணவு-தண்ணீர் தேடி யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை துரத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் நிலையில், இன்று மாலை தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. பண்ணாரி அருகே சென்ற போது லாரி பழுதாகி நின்றது.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, பழுதாகி நின்ற லாரியின் அருகே வந்து கரும்பை துதிக்கையால் சுவைத்து சாப்பிட்டது. இதை பார்த்த வாகன ஓட்டிகள், ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டனர். சிறிது நேரம் வாகனங்களுக்கு வழி விடாமல் நடுரோட்டிலேயே நின்று கொண்டு கரும்பை சுவைத்தது.
திடீரென அந்த ஒற்றை யானை பழுதாகி நின்ற லாரி ஓட்டுனர்களை துரத்தியது. இதில் லாரி ஓட்டுநர்கள், லாரியை சுற்றி சுற்றி வந்து யானைக்கு போக்கு காட்டி உயிர் தப்பினர்.
இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சுமார் 15 நிமிடத்திக்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால், நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பிறகு யானை மெல்ல மெல்ல நகர்ந்து ரோட்டை கடந்து வனப்பகுதியில் சென்றது. பிறகு வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.