Categories: தமிழகம்

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்…தடுக்க தவறிய வனத்துறை: கால்நடைகளுட்ன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து விவசாய பயிர்களையும் கால்நடை தீவனங்களையும் சேதப்படுத்தும் காட்டு யானைகளை தடுக்க தவறிய வனத்துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் கால்நடைகளுடன் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் ஊரக பகுதிகளான தாசம்பாளையம், குருமபனூர், நெல்லித்துரை, தேக்கம் பட்டி , சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டுயானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

வாழை,தென்னை, கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருவதால் பெருமளவில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.இதனால் பனப்பயிர்களை விளைவிப்பதை தவிர்த்து கால்நடை தீவனங்களான சோளம் பயிர்,மக்காச்சோளம்,சீமைப்புல் போன்றவைகளை பயிர் செய்து கால்நடைகளுக்கு அளித்து பால் உற்பத்தி செய்து வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இதுவரை பணப்பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுயானைகள் தற்போது கால்நடை தீவனங்களான மக்காச்சோளம், சீமைப்புல்,சோளப் பயிர் போன்றவற்றையும் சேதப்படுத்த துவங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய நிலையில் தற்போது கால்நடைகள் தீவனத்தையும் விட்டு வைக்காமல் யானைகள் சேதப்படுத்தி வருகிறது.

எனவே பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகள் தடுக்க தவறிய வனத்துறை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வேனுகோபால் தலைமையில் ஆடு,மாடு போன்ற கால்நடைகளுடன் பங்கேற்ற விவசாயிகள் வனத்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். காட்டுயானைகளால் எவ்வித விவசாயமும் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டும் விவசாயிகள் பணப்பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அதனை தவிர்த்து கால்நடைகளை வளர்த்து அதற்கு உணவாக சேளத்தட்டு, மக்காச்சோளம் போன்றவை வளர்த்து அதனை உணவாக கால்நடைகளுக்கு அளித்து பால் உற்பத்தி செய்து வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் அதனை கூட விடாமல் காட்டுயானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!

சூர்யா பட வில்லன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்…

42 minutes ago

கழுத்தை நெறித்து 3 வயது குழந்தை கொலை.. விசாரணையில் சிக்கிய தாய் : கடைசியில் டுவிஸ்ட்!

திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும்…

2 hours ago

விடாது கருப்போட காப்பியா? சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டிலால் எழுந்த சந்தேகம்?

90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர் 1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க…

2 hours ago

பாகிஸ்தானுக்கு உதவாதீங்க; கம்முனு இருங்க- நெட்டிசன்களை பார்த்து எச்சரிக்கும் ராஜமௌலி

ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…

3 hours ago

சினிமாவை விட்டு விலகமாட்டேன்.. கர்ப்பம் ஆனால் கூட… டாப் நடிகை!

சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…

4 hours ago

ராயல் சல்யூட்… பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…

4 hours ago

This website uses cookies.