Categories: தமிழகம்

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்…தடுக்க தவறிய வனத்துறை: கால்நடைகளுட்ன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து விவசாய பயிர்களையும் கால்நடை தீவனங்களையும் சேதப்படுத்தும் காட்டு யானைகளை தடுக்க தவறிய வனத்துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் கால்நடைகளுடன் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் ஊரக பகுதிகளான தாசம்பாளையம், குருமபனூர், நெல்லித்துரை, தேக்கம் பட்டி , சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டுயானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

வாழை,தென்னை, கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருவதால் பெருமளவில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.இதனால் பனப்பயிர்களை விளைவிப்பதை தவிர்த்து கால்நடை தீவனங்களான சோளம் பயிர்,மக்காச்சோளம்,சீமைப்புல் போன்றவைகளை பயிர் செய்து கால்நடைகளுக்கு அளித்து பால் உற்பத்தி செய்து வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இதுவரை பணப்பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுயானைகள் தற்போது கால்நடை தீவனங்களான மக்காச்சோளம், சீமைப்புல்,சோளப் பயிர் போன்றவற்றையும் சேதப்படுத்த துவங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய நிலையில் தற்போது கால்நடைகள் தீவனத்தையும் விட்டு வைக்காமல் யானைகள் சேதப்படுத்தி வருகிறது.

எனவே பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகள் தடுக்க தவறிய வனத்துறை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வேனுகோபால் தலைமையில் ஆடு,மாடு போன்ற கால்நடைகளுடன் பங்கேற்ற விவசாயிகள் வனத்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். காட்டுயானைகளால் எவ்வித விவசாயமும் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டும் விவசாயிகள் பணப்பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அதனை தவிர்த்து கால்நடைகளை வளர்த்து அதற்கு உணவாக சேளத்தட்டு, மக்காச்சோளம் போன்றவை வளர்த்து அதனை உணவாக கால்நடைகளுக்கு அளித்து பால் உற்பத்தி செய்து வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் அதனை கூட விடாமல் காட்டுயானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…

15 hours ago

வாடகைக்கு ஆள் பிடித்து திமுக புகழை பாடச் சொன்னால் மட்டும் போதுமா? அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…

15 hours ago

வெற்றிமாறன் கையில் எடுக்கும் புது முயற்சி? இதான் ஃபர்ஸ்ட் டைம்! இது ரொம்ப புதுசா இருக்கே?

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…

16 hours ago

Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?

டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…

17 hours ago

அஜித் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர்.. இது அவருடைய பெருந்தன்மை : காங்., தலைவர் பேச்சு!

மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…

18 hours ago

பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்? இயக்குனர் எடுத்த முடிவால் ஹீரோவே மாறிய சம்பவம்!

திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…

18 hours ago

This website uses cookies.