கோவை தடாகம் பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பன்னிமடை அடுத்த வரப்பாளையம் பிரிவு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை, விவசாயி கணேசன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது, அங்கிருந்த தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனங்களை உண்ண முயன்ற நிலையில், முழுமையாக உள்ளே நுழைய முயலாததால் எட்டியவரை வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.
இவை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், காட்டுயானைகள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் நுழையக்கூடும் என்பதால், வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.