கோவை : காலை நேரத்தில் பரபரப்பான மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் உலா வந்த காட்டு யானை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வழியில் கல்லாறு வனப்பகுதியில் ஏராளமான யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் கடந்து செல்கின்றன.
இந்த நிலையில் இன்று காலையில் பரபரப்பான ஊட்டி சாலையில் உலா வந்த காட்டு யானையை கண்டவுடன் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்தனர். பின்னர் சற்றுநேரத்தில் யானை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது.இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர். அதன் பின்னரே தங்களது வாகனத்தை எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் பயணிக்கும் போது மெதுவாகவும், ஜாக்கிரதையாகவும் தங்களது வாகனத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.