மீண்டும் ஜொலிப்பாரா நடிகர் பிரசாந்த்.? பிறந்த நாளுக்கு குவியும் வாழ்த்து.!

வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் பிரசாந்த். டாப் இயக்குநர்களான பாலு மகேந்திரா, மணிரத்னம், சங்கர் போன்றவர்களின் திரைப்படங்களின் நடித்துள்ளார். இவரது சினிமா கெரியரில் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, வின்னர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

அந்த வகையில், இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ், முக்கிய இடத்தினை பிடித்துள்ளது. அப்போதே நம்பமுடியாத கிராபிக்ஸ் காட்சிகள், உலக அழகி ஐஸ்வர்யாராய், இரட்டை வேடம், உலக அதிசயங்கள் அடங்கிய பாடல் என படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்து வெற்றிக்கனியை எட்டியிருந்தது.
ஜீன்ஸ் படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களின் முக்கிய இடத்தை பிடித்திருந்தார் நடிகர் பிரசாந்த். இன்றைய தலைமுறையின் தல, தளபதியெல்லாம் அப்போது பிரசாந்த் என்ற நடிகருக்கு பின்வரிசையில் இருந்தவர்கள் என்றுக்கூட சொல்வார்கள். அப்படி தமிழ் சினிமாவில் வலம் வரத்தொடங்கி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை 2005-ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரசாந்த். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தத் திருமணம் வெகு விரைவிலேயே விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் பிரசாந்த் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் பொன்னர் சங்கர் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். கடைசியாக வெளியான மம்பட்டியான் உள்ளிட்ட அவரது படங்கள் பெரிதாக ஹிட் அடிக்காததால், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

ராம் சரண் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் தான் ‘வினய விதய ராமா’. இந்த திரைப்படத்தில் கண்ட தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்த போயினர். அதற்கு காரணம் மனதில் பதியாத கதாபாத்திரத்தில் நடித்தது தான் . ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருந்த பிரசாந்துக்கு இந்த நிலைமையா என சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அப்பா தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த். இன்று பிரசாந்தின் 49வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சிம்ரன் பிரஷாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். மீண்டும் தமிழ் சினிமாவில் எப்போது ரீ என்ட்ரி கொடுப்பார் என்பதே அவரது ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

10 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

11 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

12 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

12 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

13 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.