தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமா செயல்படுதா? ஈவிகேஎஸ்க்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, மீன்வளத்துறை அமைச்சர் எல் முருகன் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.
காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வருகை புரிந்த அவருக்கு சங்கர மடம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின், காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் 15 நிமிடம் தனிமையில் உரையாடினர். அதன்பின் அமைச்சர் எல்.முருகனுக்கு, சங்கர மடம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளி மாநில ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருந்து தற்போது திரும்பி உள்ள நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக அவரை சந்திக்க இயலாத நிலையில், தற்போது அவரை சந்தித்து ஆசி பெற்றதாக தெரிவித்தார்.
உலக நன்மை மற்றும் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்தித்ததாகவும், வரும் தேர்தலில் 400 இடங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றிய பெறும் எனவும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பார் எனவும் உறுதிபட பேசினார்.
தேர்தல் ஆணையம் மோடியின் அலுவலக பணியாளர் போல் செயல்படுவதாக இவிகேஎஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளது குறித்து கேட்டபோது, தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு எனவும் அப்படி மோடியின் சார்பாக செயல்பட்டிருந்தால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மற்றவர்கள் எப்படி ஜெயித்திருக்க முடியும் என்றும் அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள், தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தேசிய செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டது வரவேற்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: HEAT STROKE பாதிப்பு.. ஷாருக்கான் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் : மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!
இந்த சந்திபின்போது பாஜக மாவட்டத் தலைவர் கே எஸ் பாபு, மாவட்ட பொது செயலாளர் ருத்ரகுமார், பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் மாநில துணைத்தலைவர் கணேஷ், ஓம்சக்தி பெருமாள் , ஜம்போடை சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.