கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி, அரகண்டநல்லூர், தேவனூர் உள்ளிட்ட பகுதிகளில் புயலின் காரணமாக பெய்த கனமழையின் காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் இப்பகுதி முழுவதுமாக வெள்ளக்காடாக நீரில் தத்தளித்தது.
இதையும் படியுங்க: நகைக்கடன் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!!
இந்த நிலையில், அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் 44 பேர் வைத்திருந்த விலை பொருட்கள் முழுவதும் நீரில் மூழ்கியும், அடித்தும் செல்லப்பட்டும் வீணானது.
இந்த நிலையில், பாதிப்புக்கு உள்ளான வியாபாரிகளுக்காக ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகள் தங்களது விலை பொருட்களுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் இழப்பீட்டு தொகையாக ( ரூபாய் 3 கோடியே 12 லட்சம்) 3,12,68,466 ரூபாயை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இன்று வழங்கினார்.
மனம்பூண்டி பகுதியில் அமைந்துள்ள முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீட்டு தொகையை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர்,2026 தேர்தலில் ஊழல் அற்ற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுங்கள் என நடிகர் விஜய் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு. அவங்க வாங்குற சம்பளத்தை நேர்மையாக கொடுக்கிறாரா, விஜய் அட்வைஸ் பண்ட்ராரே அவர் வாங்குற சம்பளத்தை ஒரிஜினலா ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறாரூ என்கிற கணக்கை ஒழுங்கா ஒப்படைக்கிறாரா என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…
தவமாய் தவமிருந்து சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”.…
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்னிந்திய அழகு எலைட் அசோசியேஷன் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிலம்பரசன் தனது 49 ஆவது திரைப்படத்தில் ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தை Dawn Pictures…
This website uses cookies.