Categories: தமிழகம்

2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல்… நாங்க அப்பவே சொன்னோமே : விஜயபாஸ்கர் வைத்த ட்விஸ்ட்!!

விலைவாசி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசியல் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர் விண்ணை முற்றும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனை திமுக அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை.

அவர்கள் கவனம் முழுவதும் டாஸ்மாக் கடையில் தான் உள்ளது. டாஸ்மார்க் சரக்கை பத்து ரூபாய் பாட்டிலுக்கு கூட வைத்து விற்பவர் தற்போது புழல் சிறையில் உள்ளார்.

மீண்டும் அதிமுக ஆட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது. அப்போது அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.

அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தற்போது அரசு விதித்துள்ளது உரிமை தொகை எங்களுக்கு எல்லாம் கிடைக்காது.

அதேபோன்று பேருந்தில் இலவச பயணம் செல்பவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கேவலமாக பார்க்கின்றனர் இலவச பயணம் நாங்கள் கேட்கவில்லை. வீட்டில் உள்ளவர்கள் ரோட்டிற்கு வந்தால் தான் உரிமை தொகை கிடைக்கும் போல் உள்ளது என்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் பாஸ்கர் நிர்வாக சீர்கேட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் சீர் கெட்டுப் போய் உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை ஏன் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை என்று கடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கேள்வி எழுப்பிய பிறகுதான் நேற்று மருத்துவ படிப்பு முடித்து முதல் பேட்ச் வெளியே செல்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அன்னவாசல் மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவரை பணியிட மாற்றம் செய்தும் மருத்துவத்துறை இணை இயக்குனரை பணியிட நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் இதுதான் நிலை. அனைத்து மருத்துவமனைகளிலும் அமைச்சர் ஆய்வு செய்தால் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தால் இவர்களுடைய ஆட்சியையும் சஸ்பெண்ட் செய்யும் நிலைதான் வரும்

மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை விடுத்து அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். தலைமை திறனற்ற முறையில் செயல்பட்டால் கீழே பணியாற்றுபவர்களும் அதே போல் தான் இருப்பார்கள்.

தற்போது சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது அதனை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிமுக ஆட்சி காலத்தில் ஆண்டிற்கு நான்காயிரம் மருத்துவர்கள் பணியாளர்கள் ஆகியோர் ஆனால் திமுக ஆட்சியில் மருத்துவர்கள் பணியாளர்கள் ஆகியோர் பணியமற்றப்படவில்லை.

மருத்துவர்கள் இணை இயக்குனரையும் குறை சொல்வது அமைச்சரின் திறன் இல்லாததை காட்டுகிறது. அமைச்சரை முன்னிலைப் படுத்துவதற்காக இணை இயக்குனரை சஸ்பெண்ட் செய்துள்ளார் இது கண்டிக்கத்தக்கது.

இணை இயக்குனரை அவ்வளவு எளிதாக சஸ்பெண்ட் செய்ய முடியாது முதலில் அவருக்கு விளக்கம் கேட்க வேண்டும் விளக்கம் சரியில்லை என்றால் விசாரணை செய்து அதன் பிறகு சஸ்பெண்ட் செய்யலாம் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.