Categories: தமிழகம்

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க..உதவி கேட்பது போல் நடித்து இளைஞரிடம் வழிப்பறி : கைதேர்ந்த பெண் களவாணி கைது..!!

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவர் கேபிள் டிவி யில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் கொடுங்கையூர் எம். ஆர் நகர் முதல் குறுக்கு தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இளம் பெண் மற்றும் அவரது நண்பர் இருவரும் எங்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லை என்று கூறி வண்டியை சிறிது நேரம் தள்ள கூறியுள்ளனர்.

உடனே ஆசிக் அவருக்கு உதவி செய்ய முன் வந்தார். அப்போது அந்த இளம்பெண் மற்றும் அவருடன் வந்த நபர்  கத்தியை எடுத்துக் காட்டி ஆசிக்கின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்தனர்.

ஆசிக்கின் வண்டியை அந்த இளைஞரும் மற்றொரு இருசக்கர வாகனத்தை அந்த இளம் பெண்ணும் எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிக் இதுகுறித்து கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே கொடுங்கையூர் பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சில இளம் பெண்களின் புகைப்படத்தை ஆசிக்கிடம் காட்டி சம்பவத்தில் ஈடுபட்டது.

கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த மோனிகா வயது 20 என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த அவரது நண்பர் தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து மோனிகா மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே மோனிகா மீது சில திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.