வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 5.5 லட்சம் நகையை கொள்ளை அடித்த பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சரவணம்பட்டி அருகே சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி உள்ளார். இவர்களுடன் வெங்கடேஷின் பெற்றோர் மற்றும் பாட்டி ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி வெங்கடேஷ் தாயாருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வீட்டின் அவருடைய 96 வயதான பாட்டி சரஸ்வதி மட்டும் தனியாக இருந்தார்.
மாலையில் வெங்கடேசன் மனைவி வீடு திரும்பிய போது மூதாட்டி காயம் அடைந்த நிலையில், கீழே கிடந்தார், பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து பொருட்கள் கீழே சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த 8.5 பவுன் நகை காணவில்லை அதன் மதிப்பு ரூபாய் 5.5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதை அடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில ஒரு பெண் வெங்கடேசன் வீட்டுக்குள் செல்வதும் சிறிது நேரம் கழித்து அவர் வெளியே திரும்பி வருவதும் பதிவாகி இருந்தது.
உடனே அந்த பெண் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த பெண் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி தீபா என்பதும், அவர்கள் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்தது.
எனவே அவர் தான் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த தீபாவை போலீசார் கைது செய்தனர்.
அவர் தனது வீட்டில் மறைத்து வைத்து இருந்த 8.5 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.