தமிழகம்

பள்ளிக் காதலை கைவிட நினைத்த காதலன்.. ’அங்கேயே’ கட் செய்த காதலி.. திடுக்கிடும் பின்னணி!

8 வருடக் காதலை விடுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலனின் பிறப்புறுப்பை காதலி அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர்நகரைச் சேர்ந்தவர் ஹீனா (22). இவர் அடேஷம் அகமது (24) என்பவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்து உள்ளார். ஆனால், அகமது, ஹீனாவுக்குத் தெரியாமல் திடீரென வீட்டில் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்ய தயாராகி உள்ளார்.

ஆனால், ஒருகட்டத்தில் இது குறித்து ஹீனாவுக்குத் தெரிய வந்து உள்ளது. எனவே, இறுதியாக உன்னிடம் பேச வேண்டும் என அகமதுவை விருந்தினர் இல்லத்திற்கு (Guest House) அழைத்து உள்ளார். இதன் பேரில், அங்கு சென்ற அகமது உடன் ஹீனா பேசிக் கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அகமதுவைத் தாக்கத் தொடங்கினார். அப்போது, அவரது பிறப்புறுப்பையும் அவர் அறுத்து உள்ளார். பின்னர், தன்னைத் தானே கொலை செய்ய நினைத்த ஹீனா, மணிக்கட்டை அதே ஆயுதத்தால் வெட்டி உள்ளார்.

இதனால் இருவரும் வலியால் துடித்து உள்ளனர். பின்னர், ஹீனாவைக் காப்பாற்ற முயன்ற அகமது, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு மீரட் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதில், அகமதுவுக்கு குழந்தை பிறப்பதற்கான நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இதையும் படிங்க: திமுக செயல்பாடுகளுடன் முரண்பாடு இருக்கு.. அப்போ 25 தொகுதி? திருமாவளவனின் ப்ளான்!

அதேநேரம், ஹீனாவைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் காருக்குள் நடைபெற்றதாக அகமதுவும், கெஸ்ட் ஹவுஸில் நிகழ்ந்ததாக ஹீனாவும் கூறியுள்ளனர். மேலும், இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.