Categories: தமிழகம்

மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்!

மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்!

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த நேமளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெட்ரோல் நிலையம் பின்புறம் 35 வயது இளம் பெண் முகத்தில் ஆங்காங்கே காயங்களுடன் சடலமாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து நேமலூர், செதில்பாக்கம், சத்தியவேடு சாலை, மாதர்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது இறந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அரசு மதுபான கடை உள்ளது. அந்த அரசு மதுபான கடையிலிருந்து மூன்று பேர் பெட்ரோல் பங்க் பின்புறமாக ஒரு பெண்ணுடன் செல்லும் காட்சிகள் தெரிந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சம்பவங்களின் ஈடுபட்ட குற்றவாளிகளின் முகத்தை வைத்து பார்த்தபோது அதில் சிலர் இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து அந்த மூன்று நபர்களை அடையாளம் கண்டு தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் படிக்க: என் கையை உடைத்தது கோவை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தான் : சவுக்கு சங்கர் புகார்!

இந்த நிலையில் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்பெண் பெட்ரோல் பங்க் இருட்டு பகுதியில் சென்றதாகவும் அதை பின்தொடர்ந்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா (25), தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர்( 21), கண்ணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெபக்குமார்(24) ஆகியோர் 3 பேரும் அந்த பெண்ணை கஞ்சா போதையில் சீரழித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது .

இதில் சூர்யா, சுரேந்தர் இருவர் மீது ஏற்கனவே கள்ளக்காதல் விவகார கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து பாதிரிவேடு போலீசார் மேற்கண்ட மூன்று வாலிபர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பாதிரிவேடு காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை கண்டறிய போலீசார் தொடர்ந்து ஆந்திர மற்றும் தமிழ்நாடு எல்லை கிராம பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.