சென்னையில் தனிமையில் உறவில் இருந்த பெண்ணின் நகைகளைப் பறித்த முகநூல் நண்பர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: சென்னை அடுத்த திருவிக நகரைச் சேர்ந்தவர் 54 வயதான பெண். இவர் கணவரைப் பிரிந்து தனது தாயுடன் வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முகநூல் மூலம் சிவா என்ற நபர் அறிமுகமாகி உள்ளார்.
இதனையடுத்து, இருவரும் செல்போன் எண்ணைப் பரிமாறி, பேசி வந்து உள்ளனர். இடையிடையே இருவரும் தனியாகச் சந்தித்து உள்ளனர். அந்த வகையில், நேற்று முன்தினம் காலை, முகநூல் நண்பரான சிவா அப்பெண்ணை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
அதற்கு அப்பெண்ணும் சம்மதம் தெரிவித்து உள்ளார். இதன் பேரில் பெண்ணின் வீட்டிற்கு சிவா வந்து உள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து இருவரும் தனிமையில், நெருக்கமாக உல்லாசமாக இருந்து உள்ளனர். இதனையடுத்து, லட்சுமி குளிப்பதற்காக தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி மேசையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்று உள்ளார்.
தொடர்ந்து, குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, மேசையில் கழற்றி வைத்து இருந்த நான்கரை சவரன் மதிப்புள்ள செயின், ஒன்றரை சவரன் மதிப்புள்ள மற்றொரு செயின், ஒரு சவரன் வளையல் மற்றும் ஒரு சவரன் மோதிரம் உள்பட 8 சவரன் நகைகள் காணாமல் போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றினால் ரூ.1,000 அபராதம்.. ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இதனையடுத்து, அங்கு ஹாலில் அமர்ந்திருந்த சிவாவையும் காணவில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாமல் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை திருவிக நகர் காவல் நிலையத்தில் அப்பெண் இது குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிவாவின் முகநூல் கணக்குகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.