கோவை: கோவையில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் ஏ.டி.எம் கார்டை திருடிய வடமாநில தொழிலாளர்கள் அதிலிருந்து ரூ.8.67 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது அனைவி யசோதா. கடந்த 4ம் தேதி யசோதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், யசோதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் யசோதாவிடம் இருந்த ஏ.டி.எம் கார்டை திருடிச்சென்று அதிலிருந்த ரூ.8.67 லட்சத்தை திருடிச்சென்றனர்.
இதையறிந்த கிருஷ்ணசாமி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த போலீசார் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அதுல் சோகை (55) மற்றும் ராஜ் பங்கிங் (31) ஆகிய இருவரை கைது செய்து கொள்ளையடித்த பணத்தை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.