சென்னை ; பெரம்பூரில் அரசு பேருந்து நடத்துனருக்கும் , பெண் பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை பெரம்பூர் பணிமனையை சேர்ந்தவர் செல்வகுமார் (47). இவர் நடத்துனராக உள்ளார். நேற்று காலை பிராட்வேயில் இருந்து பெரியார் நகர் நோக்கி செல்லும் தடம் எண் 42 என்ற பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.
இந்த பேருந்தானது , கணேசபுரம் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றுக் கொண்டு புறப்படும் போது , புளியந்தோப்பு கன்னிகா புரத்தை சேர்ந்த அனிதா என்ற பெண்மணி மயிலாப்பூரில் உள்ள தான் பணி செய்யும் நிறுவனத்திற்கு செல்ல ஓடிவந்து பேருந்து ஏறியதால் நடத்துனர் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், பேருந்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேருந்து பெரம்பூர் பேருந்து நிலையம் வந்தவுடன் வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவருக்கு ஒருவர் கையால் தாக்கி கொண்டுள்ளனர்.
இது குறித்து அனிதா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கவே ரோந்து வாகனம் வந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்துள்ளனர். சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால் இந்த வீடியோ வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.