தமிழகம்

சேலத்தில் புதரில் நிர்வாணமாக இளம்பெண் சடலம் மீட்பு.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!

சேலத்தில் பூண்டு வியாபாரியிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேலம்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் 43 வயதுடைய மனைவி, கடந்த நவம்பர் 25ஆம் தேதி காலை, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அப்பெண் வீடு திரும்பாததால் கணவர், மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால், அவரின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. எனவே, சேலம் தனியார் மருத்துவமனையில் விசாரித்து உள்ளனர். அப்போது, அப்பெண் மருத்துவமனைக்கு வரவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், நவம்பர் 27ஆம் தேதி சேலம் மாநகர துணை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதில், அப்பெண்ணிடம் கடைசியாக பேசியது கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சேர்ந்த பூண்டு வியாபாரி கனகராஜ் என்பதும், இவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, கனகராஜைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கனகராஜ் பூண்டு வியாபாரம் நிமித்தமாக அப்பெண்ணின் ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இருவரும் கடந்த 10 நாட்களாக செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் தான், நவம்பர் 25ஆம் தேதி, கோரிமேடு பகுதிக்கு காலை 10 மணிக்கு கனகராஜைப் பார்க்க அப்பெண் வந்துள்ளார்.

இதையும் படிங்க: மெத்தபெட்டமைன் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் போலீசார்.. என்ன நடந்தது?

பின்னர் அந்தப் பெண்ணை தனியாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதேநேரம், தன்னுடைய ரவுடி கூட்டாளியான கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை வரவழைத்து, இருவரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் பெண்ணின் தலையில் அடித்து மயக்கமடைய வைத்துள்ளனர். பின்னர் சக்திவேலும், கனகராஜூம் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து அவரின் உடலை முட்புதரில் நிர்வாண நிலையில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளத் தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில், பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல் மற்றும் கனகராஜ் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

2 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

2 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

3 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

3 hours ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

3 hours ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

4 hours ago

This website uses cookies.