கரூரில் கணவர் இறந்த பின்பு 10 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்த நபருடன் வீட்டில் தனியாக இருக்கும்போது ஏற்பட்ட தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அடுத்த அரசு காலனி தங்கராஜ் நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரூபிதா பானு (50). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் சிராஜுதீன் இறந்துவிட்டார். இவரது மகள் திருமணமாகி குடும்பத்தினருடன் வெளியூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில். கணவர் இறப்புக்கு பின் ராஜேந்திரன் (53 )என்ற நபருடன் கடந்த 10 ஆண்டுகளாக ரூபிதாபானு தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு ரூபிதா பானுவை சந்திக்க அவரது வீட்டிற்கு ராஜேந்திரன் வந்துள்ளார். அப்போது, இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பணம் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது.
இதில் ராஜேந்திரன், ரூபிதா பானுவை கீழே தள்ளி விட்டதாகவும், மூச்சுத்திணற அமுக்கியதோடு, கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதில் ரூபிதாபானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது சம்பந்தமாக தகவல் அறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் ராஜேந்திரனை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொலை செய்ய பயன்படுத்திய கட்டை மற்றும் துணியை போலீசார் எடுத்துச் சென்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.