தருமபுரி : ஒகேனக்கல் அருவியின் அருகே செல்பி எடுக்கும் பொழுது பாறையில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்ல் நீர்வீழ்ச்சி.
இங்குள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட இயற்கை அழகை கண்டு களிக்க தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலுருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதும், மற்றும் அங்குள்ள அருவிகளின் முன் செல்பி எடுப்பதும் வழக்கம்.
அதனடிப்படையில் தருமபுரி அடுத்த பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சுமதி (வயது 35) அவரது தாய் மற்றும் சகோதரிகளுடன் ஒகேனக்கலை சுற்றி பார்த்த விட்டு அங்குள்ள மெயின் அருவி முன் அருகே இருந்த பாறை மீது ஏறி செல்பி எடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அருவியின் அருகில் இருந்த பாறையின் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த பெண் செல்பி எடுத்து இறந்த சம்பவம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.