தமிழகம்

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ள
கஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர் ரெட்டி மற்றும் தேஜா (35) தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் தேஜா தனது இரண்டு பிள்ளைகளையும் நேற்று மாலை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையும் படியுங்க: மைனர் சிறுமியுடன் கல்லூரி மாணவன் திருமணம்.. சினிமா பாணியில் சிறுமியை கடத்திய கும்பல்!

மாலை 4 மணியளவில் தகவல் கிடைத்ததும், ஜீடிமெட்லா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் தேஜாவும் அவரது மூத்த மகன் ஹர்ஷித் ரெட்டியும் (11) சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். இளைய மகன் ஆஷிஷ் ரெட்டி (9) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் ஆனால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.

போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, ​​தேஜா எழுதிய ஆறு பக்க தற்கொலைக் கடிதத்தை கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தில், தனது கணவர் வெங்கடேஸ்வர ரெட்டி மீது தனக்கு கோபம் இருப்பதாகவும், கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குக் காரணம் அவளுடைய கண் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் உடல்நிலையும் மேலும் தேஜாவின் குடும்பத்தில் இருந்த உளவியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்டதால் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது.

தேஜா எப்படி தன்னையும் தன் குழந்தைகளையும் கொல்லும் நிலைக்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

14 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

14 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

15 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

16 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

16 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

17 hours ago

This website uses cookies.