புதுச்சேரியில் பெண் ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிளான வைரம், பிளாட்டினம் பையை ஒருமணி நேரத்தில் போலீஸார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மதுமாயி பசாக் (30), திருமணமாகாத இவர் தனது பெற்றோருடன் புதுச்சேரி வந்தார். ஆசிரம பக்தர்களான இவர்கள், புதுச்சேரி குருசுக்குப்பத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த வாரம் பெங்களுருவிற்கு சென்றுவிட்டு நேற்று புதுவை திரும்பியுள்ளார்.
அப்போது பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற பிறகு, தான் கொண்டு வந்திருந்த பைகளில் 1 பை காணாமல் போய் இருப்பதும், அந்த பையில் தான் வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள நகைகளை வைத்து இருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, இது குறித்து அவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான போலீஸார் உடனே விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் பயணித்த ஆட்டோ கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்த பை பத்திரமாக மீட்கப்பட்டு மதுமாயியிடம் ஒப்படைக்கப்பட்டது.
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
This website uses cookies.