பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மனைவியை கணவன் அரிவாளால் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வி.கே மில் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி. இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவன் தாக்கியதாக கூறி மனைவி பிரியதர்சினி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை வந்துள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த மனைவி பிரியதர்ஷினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓட முயன்ற கணவர் மணியை அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கணவன் மனைவி பிரச்சினையில் மனைவியை அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பழனி நகர போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.