குழந்தை பாக்கியம் வேண்டி குறி கேட்டு வந்த இன்ஸ்டா அழகி.. நடுக்காட்டில் நடந்த உல்லாசம்… பூசாரி அரங்கேற்றிய நாடகம்!!
சேலம் மாவட்டம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்த 38 வயதாகும் பசவராஜ் என்பவருடைய மனைவி செல்வி. இவருக்கு 28 வயது ஆகிறது. பசவராஜ் பெங்களூருவில் தங்கி இருந்து கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
பசவராஜ் மற்றும் செல்வி தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. இதுவரை இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
குழந்தை பேறுக்காக கடந்த ஒரு ஆண்டாக செல்வி பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் பரிகாரம் செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த 15-ந் தேதி காலை செல்வி திடீரென மாயமானார். மனைவியை காணவில்லை என தாரமங்கலம் போலீசில் பசவராஜ் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் சேலம் தாரமங்கலம் போலீசார் செல்வியை தேடி வந்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, செல்வி பேருந்தி ஏறி, இரும்பாலை அருகேயுள்ள பெருமாள்பட்டியிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
அதையடுத்து போலீசார் அந்தக் கோயில் பகுதிக்கு நேற்று மாலை சென்று விசாரணை செய்ததில், அந்தக் கோயிலிலிருந்து 50 மீட்டர் தொலைவில் செல்வி மர்மமானமுறையில் இறந்துகிடந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
வாயில் நுரை தள்ளி விஷம் குடித்து இறந்ததுபோல் தெரிந்திருக்கிறது. மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையைக் காணவில்லை. அதனால் யாரேனும் அவரைக் கொலைசெய்துவிட்டு, நகையைத் திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டனர். பின்னர் செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் செல்வியுடன், பெருமாள்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயில் பூசாரியான பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்குப் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் பூசாரி குமாரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் செல்விக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலைசெய்ததை, அவர் ஒப்புக்கொண்டார். உடனே அவரைக் கைதுசெய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு குறி கேட்பதற்காக செல்வி சென்றிருக்கிறார். அப்போது பூசாரி குமாருடன், அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு முப்பதாயிரம் ரூபாய் பணத்தை பூசாரி குமாரிடமிருந்து செல்வி வாங்கியிருக்கிறார்.
அந்தப் பணத்துக்கு பெங்களூருவிலிருந்து தன்னுடைய கணவர் மூலம் குறைந்த விலைக்கு தங்கக்காசு வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், தங்கக்காசு வாங்கிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.
கடந்த 15-ம் தேதி கோயிலுக்கு வரும்படி செல்வியை குமார் அழைத்திருக்கிறார். அதன்படியே அவர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று குமார் கூறியிருக்கிறார். அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தனது பணத்தைத் திருப்பி தராமல், உறவுக்கு வர மறுத்ததால், குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து செல்வியைக் கொலைசெய்துவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை எடுத்துக்கொண்டு தப்பியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து போலீசார் பூசாரி மற்றும் அவரது கூட்டாளி ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.