தமிழகம்

21 வருடங்களாக கிடைக்காத அரசின் இலவச வீட்டு மனை பட்டா.. போலீசார் முன் எடுத்த விபரீத முடிவு!

21 ஆண்டுகளாக பட்டா கேட்டும் நடவடிக்கை எடுக்காததாகக் கூறி வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்: வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இங்கு, இன்று மக்கள் குறைதீர்வுக் கூட்டம், ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்திற்கு, வேலூர் அடுத்த பொய்கை சமத்துவ புரத்தைச் சேர்ந்த யசோதா (44) என்ற பெண் வந்தார்.

அப்போது, திடீரென தனது பையில் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக யசோதா மீது தண்ணீரை ஊற்றினர்.

இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, யசோதாவிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில், நான், எனது கணவர் மற்றும் 2 மகள்களுடன் பொய்கை சமத்துவபுரத்தில் வசித்து வருகிறேன். சமத்துவபுரத்தில் எங்களுக்கு 5 சென்ட் நிலத்துடன், அரசு சார்பில் வீடு ஒதுக்கி செய்து தரப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை இடத்திற்கு உண்டான பட்டா எங்களுக்கு வழங்கவில்லை. இதனால் எங்களுடைய பின்புறத்தில் உள்ள வீட்டுக்காரர், அடிக்கடி உங்களுடைய பட்டாவுக்கு உண்டான ஆதாரத்தைக் காட்டுங்கள், இல்லையென்றால் காலி செய்யுங்கள் என மிரட்டல் விடுகிறார்.

இதையும் படிங்க: டிரெண்டிங்கான அல்லு அர்ஜுன்.. பின்னணியில் இப்படி ஒரு அரசியலா?

அது மட்டுமல்லாமல், எங்களுடைய இடத்தை அவர் அபகரிக்க முயல்கிறார். நான் கடந்த 21 ஆண்டுகளாக பட்டா கேட்டு பலமுறை மனு அளித்துள்ளேன். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் வேண்டுமென்றே என்னை அலைக்கழித்து வருகின்றனர். எனவே, வீட்டு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதனையடுத்து, நாளை உங்களுடைய வீட்டிற்கு தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தி, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், எனவே, இது போன்ற விபரீதமான செயல்களில் ஈடுபடக் கூடாது என வருவாய் அலுவலர் மாலதி அறிவுறுத்தினார். யசோதாவின் கணவர் ஜீவா, கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.