சென்னையில் கணவனை விட்டு பிரிந்து காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடி வெள்ளாச்சேரியைச் சேர்ந்தவர் சுதா சந்தர் மற்றும் ராகவி. இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்த போதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு ராகவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவசர அவசரமாக வெளியில் மாப்பிள்ளை பார்த்து வசந்த் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில், தனது ஒன்றரை வயது குழந்தையை விட்டுவிட்டு வந்த ராகவியை அழைத்துச் சென்று புழல் அருகே சுதாசந்தர் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த சூழலில், புழல் விநாயகபுரம் அருகே ராகவியுடன் சென்று கொண்டிருந்த சுதாசந்தர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ராகவியின் சகோதரர் பரத் மற்றும் அவரது உறவினர் உதயா உள்ளிட்டோர் இந்த கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.