சென்னையில் கணவனை விட்டு பிரிந்து காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடி வெள்ளாச்சேரியைச் சேர்ந்தவர் சுதா சந்தர் மற்றும் ராகவி. இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்த போதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு ராகவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவசர அவசரமாக வெளியில் மாப்பிள்ளை பார்த்து வசந்த் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில், தனது ஒன்றரை வயது குழந்தையை விட்டுவிட்டு வந்த ராகவியை அழைத்துச் சென்று புழல் அருகே சுதாசந்தர் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த சூழலில், புழல் விநாயகபுரம் அருகே ராகவியுடன் சென்று கொண்டிருந்த சுதாசந்தர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ராகவியின் சகோதரர் பரத் மற்றும் அவரது உறவினர் உதயா உள்ளிட்டோர் இந்த கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.