நாகப்பட்டினம் மேலகோட்டைவாசல் நடராஜர் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கார்த்தீசன் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவரது மனைவி வள்ளி (30). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் காளியப்பன் மனைவி சுகன்யா என்பவருக்கும் கார்த்திசனுக்கும் திருமணத்தை தாண்டிய தகாத உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: பாஜக பிரமுகர் திடீர் கைது.. திண்டுக்கல்லில் தீராத தலைவலி : பரபரப்பு!
இவர்களின் உறவை அறிந்த கார்த்தீசன் மனைவி வள்ளி கடந்த 2016 ஆம் ஆண்டு காளியப்பன் வீட்டிற்கு சென்று சுகன்யா மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுகன்யா நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரிடம் நாகப்பட்டினம் மாஜிஸ்ட்ரேட் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து சுகன்யா உயிரிழந்துள்ளார். இது குறித்து காளியப்பன் அளித்த புகாரில் நாகப்பட்டினம் போலீசார் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நாகப்பட்டினம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.