நாகப்பட்டினம் மேலகோட்டைவாசல் நடராஜர் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கார்த்தீசன் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவரது மனைவி வள்ளி (30). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் காளியப்பன் மனைவி சுகன்யா என்பவருக்கும் கார்த்திசனுக்கும் திருமணத்தை தாண்டிய தகாத உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: பாஜக பிரமுகர் திடீர் கைது.. திண்டுக்கல்லில் தீராத தலைவலி : பரபரப்பு!
இவர்களின் உறவை அறிந்த கார்த்தீசன் மனைவி வள்ளி கடந்த 2016 ஆம் ஆண்டு காளியப்பன் வீட்டிற்கு சென்று சுகன்யா மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுகன்யா நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரிடம் நாகப்பட்டினம் மாஜிஸ்ட்ரேட் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து சுகன்யா உயிரிழந்துள்ளார். இது குறித்து காளியப்பன் அளித்த புகாரில் நாகப்பட்டினம் போலீசார் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நாகப்பட்டினம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.