நாகப்பட்டினம் மேலகோட்டைவாசல் நடராஜர் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கார்த்தீசன் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவரது மனைவி வள்ளி (30). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் காளியப்பன் மனைவி சுகன்யா என்பவருக்கும் கார்த்திசனுக்கும் திருமணத்தை தாண்டிய தகாத உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: பாஜக பிரமுகர் திடீர் கைது.. திண்டுக்கல்லில் தீராத தலைவலி : பரபரப்பு!
இவர்களின் உறவை அறிந்த கார்த்தீசன் மனைவி வள்ளி கடந்த 2016 ஆம் ஆண்டு காளியப்பன் வீட்டிற்கு சென்று சுகன்யா மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுகன்யா நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரிடம் நாகப்பட்டினம் மாஜிஸ்ட்ரேட் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து சுகன்யா உயிரிழந்துள்ளார். இது குறித்து காளியப்பன் அளித்த புகாரில் நாகப்பட்டினம் போலீசார் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நாகப்பட்டினம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.