Categories: தமிழகம்

ஆம்னி பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்… சினிமா பாணியில் பேருந்தை துரத்திய உறவினர்கள் : தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

ஆம்னி பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்… சினிமா பாணியில் பேருந்தை துரத்திய உறவினர்கள் : தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையில் இருந்து நேற்று இரவு திருநெல்வேலிக்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்னையில் இருந்து பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அதிகாலை ஒரு மணி அளவில் பேருந்து திண்டிவனம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தது. அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் குடித்துவிட்டு பேருந்தில் ஏறி வந்து கொண்டிருந்தனர். உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை 11 பேர் கொண்ட இந்த கும்பலில் இருவர் மட்டும் பெண் மீது தவறான கண்ணோட்டத்தில் பாலியல் சீண்டல் செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இதனை அடுத்து அந்தப் பெண் விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கவே அவரது உறவினர்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்தனர்.

ஆனால் பேருந்து நிற்காமல் செல்லவே ஆத்திரமடைந்த உறவினர்கள் சினிமா பட பாணியில் பேருந்தை இருசக்கர வாகனம் மூலம் எட்டு கிலோமீட்டர் துரத்தி விழுப்புரம் அடுத்த பிடாகம் என்ற இடத்தில் பேருந்தை தடுத்து நிறுத்தி அதில் இருந்த 11 நபர்களை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்து அந்த பேருந்து மற்றும் அதிலிருந்து அனைவரையும் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அனைவரையும் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலில் சீண்டலில் ஈடுபட்ட இருவரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மற்ற பேருந்தில் வந்த பயணிகளையும் பேருந்தையும் அனுப்பி வைத்தனர். இச்சம்பத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.