தமிழகம்

சர்ச்சில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சாதி பெயர் சொல்லி திட்டியதால் தற்கொலை முயற்சி!

கோவை ரெயின்போ காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (38). இவருக்கு கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் முருகேஸ்வரி மற்றும் அவருடைய கணவர் ராம்குமார் இருவரும் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: அலங்காநல்லூரில் கெத்து காட்டிய சூரியின் காளை…உதயநிதி கொடுத்த ரியாக்ஷனை பாருங்க..!

இதில் சர்ச் நிர்வாகத்தினர் முருகேஸ்வரியை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பணியிட மாறுதல் செய்து உள்ளனர். முருகேஸ்வரி இதற்கு விளக்கம் கேட்டு இருக்கிறார்.

அப்பொழுது அந்த நிர்வாகத்தினர் சாதிய ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பாலியல் தூண்டுதலின் பெயரில் அவருக்கு வன்கொடுமை நடந்து உள்ளதாகவும், இவர் கேள்வி கேட்டவுடனே அவருடைய கணவர் ராம்குமாரையும் வேலையில் இருந்து நிறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3.11.2024 அன்று தேவாலய வழிபாட்டுக்கு வந்து இருந்த முக்கிய பொறுப்பில் உள்ள அமிர்தம் என்பவரிடம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும், ஆசை வார்த்தை கூறி அவர்களை மத மாற்றி விட்டதாக கூறிக் கொண்டு இருந்த வேளையில், அங்கு வந்த பாக்கிய செல்வன் என்பவர் ஜாதி ரீதியாக தகாத வார்த்தைகளால் பேசி அங்கு வந்து இருந்தோர் முன்னிலையில் அவமானப்படுத்தி தாக்கி உள்ளதாகவும், அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் தேவாலயத்தின் பொருளாளர் காட்வின் என்பவரிடம் முறையிட்ட போது, அவர் பாக்கியசெல்வன் மற்றும் ராஜேந்திரகுமார் ஆகியோரிடம் பேசி புது வருடத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறியுள்ளனர்.

அவர்களின் வறுமை மற்றும் ஏழ்மையை பயன்படுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு, கவிராஜ் என்பவரின் சூழ்ச்சியாலும் தீமோதி ரவிந்தர் அவர்களின் நிர்பந்தத்தின் பேரில் கட்டாய மதமாற்றம் செய்து, அவர்களுக்கு நிரந்தர வேலை வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக, அதனை அவர்கள் தட்டி கேட்டதாலேயே அவர்களுக்கு இதுபோன்ற கொடுமை நடந்து உள்ளது என்றும் அதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதாக, முருகேஸ்வரி காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் அனைவரிடமும் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு முருகேஸ்வரி தற்கொலை முயற்சி செய்து உள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதற்கு காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தக்க நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வழிவகை செய்து தர வேண்டும் என்று வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

14 minutes ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

60 minutes ago

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…

2 hours ago

இபிஎஸ் குறித்து மோசமான கார்ட்டூன்… திமுக ஐடி விங் மீது அதிமுக பரபரப்பு புகார்!

தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…

2 hours ago

Second Half நல்லாதான் இருக்கு;; ஆனா First Half ? – குபேரா படம் பத்தி என்ன பேசிக்கிறாங்க?

வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…

2 hours ago

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

3 hours ago

This website uses cookies.