தமிழகம்

சர்ச்சில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சாதி பெயர் சொல்லி திட்டியதால் தற்கொலை முயற்சி!

கோவை ரெயின்போ காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (38). இவருக்கு கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் முருகேஸ்வரி மற்றும் அவருடைய கணவர் ராம்குமார் இருவரும் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: அலங்காநல்லூரில் கெத்து காட்டிய சூரியின் காளை…உதயநிதி கொடுத்த ரியாக்ஷனை பாருங்க..!

இதில் சர்ச் நிர்வாகத்தினர் முருகேஸ்வரியை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பணியிட மாறுதல் செய்து உள்ளனர். முருகேஸ்வரி இதற்கு விளக்கம் கேட்டு இருக்கிறார்.

அப்பொழுது அந்த நிர்வாகத்தினர் சாதிய ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பாலியல் தூண்டுதலின் பெயரில் அவருக்கு வன்கொடுமை நடந்து உள்ளதாகவும், இவர் கேள்வி கேட்டவுடனே அவருடைய கணவர் ராம்குமாரையும் வேலையில் இருந்து நிறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3.11.2024 அன்று தேவாலய வழிபாட்டுக்கு வந்து இருந்த முக்கிய பொறுப்பில் உள்ள அமிர்தம் என்பவரிடம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும், ஆசை வார்த்தை கூறி அவர்களை மத மாற்றி விட்டதாக கூறிக் கொண்டு இருந்த வேளையில், அங்கு வந்த பாக்கிய செல்வன் என்பவர் ஜாதி ரீதியாக தகாத வார்த்தைகளால் பேசி அங்கு வந்து இருந்தோர் முன்னிலையில் அவமானப்படுத்தி தாக்கி உள்ளதாகவும், அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் தேவாலயத்தின் பொருளாளர் காட்வின் என்பவரிடம் முறையிட்ட போது, அவர் பாக்கியசெல்வன் மற்றும் ராஜேந்திரகுமார் ஆகியோரிடம் பேசி புது வருடத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறியுள்ளனர்.

அவர்களின் வறுமை மற்றும் ஏழ்மையை பயன்படுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு, கவிராஜ் என்பவரின் சூழ்ச்சியாலும் தீமோதி ரவிந்தர் அவர்களின் நிர்பந்தத்தின் பேரில் கட்டாய மதமாற்றம் செய்து, அவர்களுக்கு நிரந்தர வேலை வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக, அதனை அவர்கள் தட்டி கேட்டதாலேயே அவர்களுக்கு இதுபோன்ற கொடுமை நடந்து உள்ளது என்றும் அதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதாக, முருகேஸ்வரி காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் அனைவரிடமும் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு முருகேஸ்வரி தற்கொலை முயற்சி செய்து உள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதற்கு காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தக்க நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வழிவகை செய்து தர வேண்டும் என்று வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.