தமிழகம்

கணவரை பிரிந்து வந்த பெண்ணுடன் இளைஞர் நெருக்கம்.. உறவை பெண் துண்டித்ததால் விபரீதம்!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் வயது 29. இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார் எந்த நிலையில் கணவரை பிரிந்து வாழும் அதே பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணுடன் ஜெயபிரகாசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர் இந்த நிலையில் ஜெயபிரகாஷ் உடன் பழகுவதை அந்த பெண் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயப்பிரகாஷ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஏன் என்னுடன் பழக மறுக்கிறாய் என எனக் கேட்டுள்ளார்.

இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சராசரியாக தாக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்

ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்ணை உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து விருகம்பட்டு காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயப்பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.