திருச்சியில் 11 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார். இவரது மனைவி ஷோபனா (26) இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். மனோஜ் குமார் கொடைக்கானலுக்கு வேலைக்கு சென்று வேலை முடித்து நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டி இருந்ததால் தனது மனைவி தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து கதவு வழியாக உள்ளே சென்று பார்த்த போது, மனைவி மற்றும் குழந்தைகள் மூன்று பேரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சோபனாவின் தாய் மற்றும் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ஆர்டிஓ விசாரணை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதை அடுத்து ஆர்.டி.ஒ தவச்செல்வம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூறாய்வு அறையில் விசாரணை நடத்தினார்.
கணவர் செய்த வியாபாரத்தில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த நிழலில் இருந்த மனைவி சோபனா தனது குழந்தைகளுடன் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.