நாட்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக பெண் வீட்டார் பெண்ணின் கணவரை அடியாட்களுடன் வந்து சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி சுண்ணாம்புகுட்டை பகுதியை சேர்ந்தவர் மாபுப் மகன் லத்தீப். இவர் நாட்டறம்பள்ளி ஆர்சி எஸ் சாலையில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சாதாஜி என்ற பெண்ணுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் 22 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாதாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணுக்கு சற்று மன நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கணவர் மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் தெரிவித்தனர். போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினரிடம் ஒப்படைத்து நல்லடக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பெண்ணின் அக்கா ரேஷ்மா உறவினர்கள் சல்மா 6 பேர் கொண்ட அடியாட்களுடன் லத்தீப்பீன் மெக்கானிக் கடைக்கு சென்று லத்தீபை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக லத்தீப் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பெண்ணின் உறவினர்கள் லத்தீப்பை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.