விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகேயுள்ள டட் நகர் கிராமத்தை சார்ந்த அன்னம்மாள் என்பவரின் மாமனார் மாணிக்கம் மற்றும் கணவரின் சகோதரர் சவரி முத்து ஆகிய இருவரும் 35 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பதற்காக அத்தியூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
அதற்கு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலராக உள்ள சங்கீதா மனுவிற்கு 500 ரூபாய் வீதம் ஆயிரம் ரூபாய் லட்சமாக வழங்க வேண்டும் அப்போது தான் ஆன்லைனில் விண்ணபித்து தருவேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து லஞ்சமாக பணம் கொடுத்து இறப்பு சான்றிதழ் பெற மனமில்லாமல் அன்னம்மாள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் 23.7.2023 நேற்றைய தினம் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் இன்று அன்னமாளிடம் ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரசாயனம் கலந்து கொடுத்து கொடுக்க கூறியுள்ளனர்.
அதன் பேரில் அன்னமாள் இன்று அரியலூர் திருக்கையிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வி ஏ ஓ சங்கிதாவிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வி ஏ ஓ சங்கீதாவை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.