Categories: தமிழகம்

பனியன் கம்பெனியில் பரவிய கள்ளக்காதல் : கணவனுக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த பெண்.. விசாரணையில் அதிர்ச்சி!!

என்னை தேடாதிங்க முதல் கணவருக்கு தெரியாமல் பனியன் கம்பெனியில் ஏற்பட்ட காதலால் இரண்டாவது திருமணம் முடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எட்டி குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் வயது (வயது 30 ). ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது தனியார் சோலார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் பாடியுரைச் சேர்ந்த வீரழகு என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் வீரழகு தனியார் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார் பின்னர் கடந்த மூன்று மாதமாக கணவரை விட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி வீரழகுவை பார்க்க ஆனந்த் தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வீரழகு வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து தனது மாமனார் இடம் கேட்ட போது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. அதனால் தனது மனைவியின் செல்போனுக்கு போன் செய்த போதும் நாட் ரீச்சபிள் என வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதை ஓபன் செய்து பார்த்த போது ஆனந்தின் மனைவி வீர அழகு அதில் வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் இருந்துள்ளது.

இதில் தான் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டேன். இனிமேல் என்னை தேடி வர வேண்டாம் எனவும் அவரது மனைவி செல்போனில் பதிவிட்டு இருந்தார்
இதைப் பார்த்ததும் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார்.

தன்னை விட்டு பிரிந்து விட்டு மூன்று மாதமாக பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற மனைவி வேறுநபருடன் பழக்கம் ஏற்பட்டு வேறு வாலிபரை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து ஆனந்த் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மனைவியை வேறு ஒருநபர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அவரிடமிருந்து பிரித்து தன்னிடம் அவரை சேர்த்து வைக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில் வீரழகு எங்கு உள்ளார் யாரை திருமணம் செய்துள்ளார். இதற்க்கு காரணமாணவர்கள் யார் என்பது குறித்து வடமதுரை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

2 days ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.