Categories: தமிழகம்

பனியன் கம்பெனியில் பரவிய கள்ளக்காதல் : கணவனுக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த பெண்.. விசாரணையில் அதிர்ச்சி!!

என்னை தேடாதிங்க முதல் கணவருக்கு தெரியாமல் பனியன் கம்பெனியில் ஏற்பட்ட காதலால் இரண்டாவது திருமணம் முடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எட்டி குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் வயது (வயது 30 ). ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது தனியார் சோலார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் பாடியுரைச் சேர்ந்த வீரழகு என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் வீரழகு தனியார் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார் பின்னர் கடந்த மூன்று மாதமாக கணவரை விட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி வீரழகுவை பார்க்க ஆனந்த் தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வீரழகு வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து தனது மாமனார் இடம் கேட்ட போது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. அதனால் தனது மனைவியின் செல்போனுக்கு போன் செய்த போதும் நாட் ரீச்சபிள் என வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதை ஓபன் செய்து பார்த்த போது ஆனந்தின் மனைவி வீர அழகு அதில் வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் இருந்துள்ளது.

இதில் தான் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டேன். இனிமேல் என்னை தேடி வர வேண்டாம் எனவும் அவரது மனைவி செல்போனில் பதிவிட்டு இருந்தார்
இதைப் பார்த்ததும் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார்.

தன்னை விட்டு பிரிந்து விட்டு மூன்று மாதமாக பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற மனைவி வேறுநபருடன் பழக்கம் ஏற்பட்டு வேறு வாலிபரை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து ஆனந்த் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மனைவியை வேறு ஒருநபர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அவரிடமிருந்து பிரித்து தன்னிடம் அவரை சேர்த்து வைக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில் வீரழகு எங்கு உள்ளார் யாரை திருமணம் செய்துள்ளார். இதற்க்கு காரணமாணவர்கள் யார் என்பது குறித்து வடமதுரை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

7 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

7 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

7 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

8 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

8 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

9 hours ago

This website uses cookies.