வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து அரசு மது பாட்டில்கள் விற்பதாக திருவலம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன், காவலர்கள் செந்தில், சுந்தர், பெண் காவலர்கள் ஆனந்தி, சங்கீதா, ஆகியோர் அரும்பருத்தி கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அரும்பருத்தி கிராமம் திரௌபதி அம்மன் கோவில் தெரு பகுதியில் விஜயா (56) என்பவர் வீட்டில் அரசு மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் விஜயாவை கைது செய்து அவரிடமிருந்து 83 அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
This website uses cookies.