கோவை : அனைத்து துறையிலும் பெண்கள் அதிக அளவில் சாதித்து வருவதாக கோவையை சேர்ந்த இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் தெரிவித்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கல்லூரியில் மகளிர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கலை,அறிவியல்,செவிலியர்,மேலாண்மை,பொறியியல் என அனைத்து துறை மாணவிகளும் கலந்து கொண்ட இதில், கல்வி குழுமங்களின் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோவை தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த நூறு வயதை கடந்த இயற்கை விவசாய பாட்டி பத்மஸ்ரீ பாப்பம்மாள் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர்,கடந்த காலங்களில் பெண்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும்,ஆனால் தற்போது அனைத்து துறைகளில் பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதாக குறிப்பிட்ட அவர், இதனை பயன்படுத்தி, அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிக அளவில் சாதித்து வருவதாக குறிப்பிட்டார்.
விழாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் சாந்தி தங்கவேலு, முதல்வர் முத்துமணி உட்பட மாணவிகள், பேராசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.