தமிழகம்

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு.. மீண்டும் அரசு மருத்துவமனையின் அவலம்!

சேலம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்ட பெண் மரணம் அடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்: சேலம் வாழப்பாடி அடுத்த பனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் – செல்லம் தம்பதி. இதில், முருகன் லாரி ஓட்டுனராக உள்ளார். இந்த தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஐந்தாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார் செல்லம். இதனை அடுத்து, நிறைமாத கர்ப்பிணியான செல்லம், பிரசவத்திற்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து, கடந்த நவம்பர் 14ஆம் தேதி செல்லம்-க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து, இந்த மருத்துவமனையிலேயே அவர் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்து உள்ளார். இதன் பேரில், அவருக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று செல்லத்தின் உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து, சேலம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உட்பட உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது குறித்து அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க: போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம்.. தீக்குளிக்கவும் தயார் : திமுக அரசுக்கு மக்கள் எச்சரிக்கை!

இருப்பினும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர். மேலும், கடந்த ஒரு வார காலமாக அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது தாய் மற்றும் சேய் உயிரிழப்பு தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.